கனமான பொழுதுகள்
Sunday, June 2, 2013
கிடைத்தது.....
உன்னில் நான் கண்டது
இழந்த என் கனவுகள் அத்தனையும்.
அடைந்த பின்புதான் புரிந்தது
மீண்டும் பெறமுடியாத அத்தனையும்
தொலைத்தேன் இன்று என்று
இறுதியில்
கிடைத்தது இந்த
கனமான பொழுது மட்டுமே.....
விடை இல்லா வினாக்கள்
விடை பெற முடிய வினாக்களால் வீணான இறந்தகாலம்,
இன்னமும் விடை தேடியே வீணாகிறது
எதிர்காலமும்
விடை இல்லா வினாக்கள் இவை என
புரியாமல் ?????????
நம்பிக்கை
தன்னை மட்டுமே நம்புகிறவன் தான்
தன்னையே
தாயாய் , தந்தையாய் , தோழனாய்
காண முடியும்
உண்மையோடு ............
மனத் தீ
இறுக்கமான மன நிலையில்
எடுக்கும் முடிவு மட்டும் அல்ல
செய்கின்ற செயலும், சொல்கின்ற சொல்லும்
தீயாய் மாறும் ..........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)