Sunday, September 2, 2012

கானல் நீர்

                                                      கானல் நீரால் தனியாது

             
                                                                           தாகம்


விடை இல்லாத வினா

உலவும் நிலவுக்கு தெரியாது என் நிலை என்னவென்று.

அலையும் என் எண்ணங்களுக்கு தெரியாது நான் யார் என்று.

தேடும்  என்  விழிகளுக்கு தெரியாது என் தேடல் என்னவென்று.

ஓடும் பொழுதுக்கு தெரியாது என் எண்ணங்கள் என்னவென்று.

ஏன்?

எனக்கே தெரியாது ஏன் தான் இப்படி நான் என்று.

விடை இல்லாத வினாவாக நான் !!!!!!!

வாழ்கை பயணம்

வேதனைகளை தாங்கிகொண்டுதான் வாழ்கை.

சோதனைகளை எதிர்கொண்டதுதான் அதன் பயணம்.

ஆசாபாசங்களை வெல்வதே பயணத்தின் நோக்கம்.

வெற்றி என்பதே இலக்கு .

வென்றபின்னர் தெரியும் அதன் இழப்பு.


ரசனை

கனவில் வருவது எல்லாம் 

நிஜத்தில் நடப்பதும் இல்லை.

நிஜத்தில் கடப்பது எல்லாம் 

கணவாய் கண்டதும் இல்லை.

நடந்த கனவுகளை ரசிப்போம். 

நடக்காத கனவுகளை மறப்போம்.





பணம்

மனம் பார்த்து இணைக்கும் மனங்களை விட 

பணம் பார்த்தே திருமனங்கள்  என்பதாலேயே 


கசந்துவிடுகிறது வாழ்க்கை விரைவில் 


மனதிற்கு இதம் பணம் இல்லை என்பதால் !!

விரும்பிய வாழ்கை இனிக்க

விரும்பியது எல்லாம் ஒருநாள் 

வெறுத்து போகலாம் .

வெறுத்த பொருள் எல்லாம் 

மீண்டும் விரும்பும் நிலை வரலாம் .

வாழ்க்கை கசக்காமல் இருக்க ......!


தனிமை

விரும்பியவரை வெறுக்கும் போது 

அவர்கள் பெற்ற வலியும் , வேதனையும் 

நாம் விரும்பியவர் நம்மை வெறுக்கும் போதே 

உணரமுடியும் 

நான் உணர்ந்துவிட்டேன் 

இன்று ..........