Sunday, February 12, 2012


தெளிந்த குளத்தில் ஒரு
கல் ...................!!!
நிலையான மனதில் ஒரு
பழி சொல்........ !!!!

நினைவுகள்


நிழல் கூட நம்மை விட்டு ஒருநாள் பிரிந்து போகலாம் !!!
ஆனால்
என்றும் பிரியாது நாம் விட்டு செல்லும் பசுமை மாறாத
நினைவுகள் !!!
என்றும் !என்றென்றும் !!

Friday, February 10, 2012

ஆனந்த கண்ணீர்


உணர்சிகளின் வுச்சகட்ட வெளிப்பாடு
கண்ணீர் !!!!!!!
ஆனந்த கண்ணீராக வரும்போது
ஏற்றுகொள்கிறோம் !!!!!!
அதுவே
துக்கமாக வந்தால்
வருந்துகிறோம் !!!!!!!!

நிஜங்கள்


நிழல் தேடும் மனங்கள் !
நிஜம் பார்க்க மறுப்பதேனோ !!
நிழல் தரும் இனிமை !!!
நிஜங்களிடம் இல்லாததாலோ !!!!

ரகசிய சிநேகிதம் !!!


சிநேகிதம் ஏன்?
ரகசிய சிநேகிதம் ஆச்சு ?
நம் நட்புக்குள் ஏதும் ரகசியம் உண்டென்று
ஊர் பேச கூடாது என்றா !
இல்லை
நமக்குள் ரகசியங்கள்
இருக்ககூடாது என்றா !!

பெற்றவள் தூங்க
அவள் பெற்றதை
அவளை பெற்றவள்
கவனிக்கிறாள்.
அவள் பெற்றதையும்
சேர்த்து !
இதில் எந்த தாய் பாக்கியம் செய்தவள்
எந்த குழந்தை புண்ணியம்
செய்தது !!!!

Thursday, February 9, 2012

மதிப்பு


மண்ணை விட்டு பிரியும் போது நாம்
நம் சந்ததிகளுக்கு விட்டு செல்ல வேண்டிய
மிக பெரிய சொத்து
மதிப்பும்! மரியாதயுமே !
காசு பணம்லாம்
காலபோக்கில்
காணாமல் போகலாம் !!
பெற்ற மதிப்பே இறுதி வரை
கூட வரும் !
இறந்த பின்னரும்
பெற்ற நல்ல பெயர்
நிலைத்து நிற்கும் !!!

Wednesday, February 8, 2012

தழும்புகள்


கள்ளம் இல்லா மனதில் கடும் விஷம் கலக்க !
நீண்ட நாள் முயற்சியில் !!
விஷம் அது முறிந்தும் !!!
விட்டு சென்ற ரணங்கள் !!!!
பரிசுகளாக !!!!!
மனதில் !!!!!!

Tuesday, February 7, 2012

வசந்த காலம்


வாழ்க்கை பயணம் ஒன்றும்
புதிது அல்ல.
பயணிக்க யோசிக்கும்
கடின பாதை.
உள்ளே நுழைந்து
வெகு துரம் கடந்தாகி விட்டது
விளையாட்டாக.
வசந்தம் வர வில்லை என்று
திரும்புவது
கோழைத்தனம்!
வருவது எல்லாம்
வசந்தம் என்று
பயணத்தை
இனிமை ஆக்குவதே
வாழ்க்கை தத்துவம் !

நினைவுகள்


சொல்ல நினைத்ததை
சொல்லாமல் விடுவதால் வரும் துன்பத்தை விட!!!!!!!!
சொல்ல நினைத்ததை சொல்லி
வரும் கஷ்டம்
மேலானதே !!!!!!!

Monday, February 6, 2012

குழந்தை மனதை கொடுத்த இறைவன்
அதற்கு அரக்க குணத்தையும் கொடுத்து விட்டான்
குழந்தை மனம் தெரியாது
அரக்ககுணம் யாருக்கும் பிடிக்காது

கிறுக்கல்கள் தான் கவிதைகளோ
அதை ரசிபதற்கும் ஒரு
ரசனை இருந்தால்
நானும் கவிஞன் ஆகி விட்டேன்
என் கிறுக்கல்களுக்கும்
ரசிகர்கள் இருப்பதால்

தேடல்


தேடல் இருக்கும் வரை தான் வாழ்க்கை இனிக்கும்
தேவை உள்ளவரை தான் தேடல் பிடிக்கும்
தேவைக்கு என தேடாமல் தேடினால்
வாழ்க்கை
இறுதி வரை இனிக்கும் !!!!!!!!!


மனம் ஒரு கண்ணாடி
உடைந்தாலும்
பிம்பம் காட்டும்.
ஒரு மனதாய் இருக்கும் போது
உண்மை உருவம் !
உடைந்த பின்
ஒரே உருவம் !!!!
பல கோணத்தில் !!!!!!!!!

இதய துடிப்பு


நமக்காக
எப்போது எல்லாம்
நம் இதயம் துடிக்கிறதோ
அப்போது எல்லாம் ஒன்றை மட்டும்
மனதில் வையுங்கள்
என்றாவது ஒரு நாள்
அதுவும்
தன் துடிப்பை நிறுத்தி விடும் என்று !!!!!!!!

தண்டனைகள் ஒன்றும் புதிது அல்ல!
அவைகளை
தகர்த்து எறிவது கடினம் இல்லை !
கட்ட பட்டு இருப்பது
அன்பு எனும்
பூட்டு
என்பதால் !!!!!!!!!!